நாமாக பிரிக்கவில்லை 08

மனைவி நானும்
உள்ளே நுழைகிறேன்
போர்வைக்குள் புகந்த நேரம்.

உம்மு ஸல்மாவே
நீர் என்
மனைவி என்ற
மகிமையில் இருக்கிறீர்
என்று மறு சிறப்பளித்தவர்
நாமில்லை

நபிகளாரே சொல்லி செய்தார்கள்
இதை நாமாக சொல்ல வில்லை
நாயகி ஸல்மாவே சாட்சிளிக்கிறார்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஹஸரத் உம்முஸல்மா நாயகி அறிவிப்பது:

'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவை நோக்கி உனது கனவரையும் இருபிள்ளைகளையும் அழைத்துவாரும் என கட்டளையிட்டார்கள். ஹஸரத் பாத்திமா அவர்கள் மூவரையும் அழைத்துவந்து நிறுத்தினார்கள் உடனே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ஃபதக்குரிய போர்வையை அவர்கள் எல்லோருக்குமேல் போட்டு இறைவா! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர். எனவே உனது ஸலவாத்தையும் பரக்கத்தையும் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் பொழிந்தருள்வாயாக! ஏனெனில் நீ மகா புகழுடையோனும்இ மகத்தானவனுமாவாய் என்றார்கள்'

உடனே நான் (உம்முஸல்மா நாயகி) அப்போர்வைக்குள் புகுந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள போர்வையை உயர்த்தினேன் உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் என் கையிலிருந்த போர்வையைப்பறித்து விட்டு நீர் நல்லோர்களிலிருப்பவர் என்றார்கள். (ஆதாரம் முஸ்னத் அஹ்மத் பாக-6 பக்-323)

ஜீவராசிகளே !!
ஜீரணித்தீரா?
இவர்கள் யாரோ !!!

கருத்துகள் இல்லை: