நாமாக பிரிக்கவில்லை 03

தவறு செய்யாதவரை
தவறு காண்பதில்
எனக்கு தேவை இருக்கா?
இல்லை இந்த
பேனாவுக்கு ஆசை இருக்கா?
வரலாற்றாசியர்களால்
தப்பாக்கி விட்டிருக்கா?

தவறு செய்யாதவரை
பழி சொன்னால்
இறையால் தண்டிக்கப்படுவதில்
எமக்கும் நம்பிக்கையுண்டு.
அவர்களுக்கும் இருந்திருக்கும்.

அப்படிருப்பின்
தேடல் இங்கு
தவறு செய்தவரை
தண்டிப்பதல்ல
தவறு செய்யாதவரின்
தலைமையில் வாழ்வதே!!

பழி சுமத்துவதுமல்ல
பரிசீலனை செய்வதே!!

தவறு செய்தவரை
மன்னிப்பதும்
முடியாது என்பதும்
எம் கடமையல்ல
காயப்பட்டவர்களின் கல்புடமை.

எம் உடமை
மறுமை வாழ்வுக்காக
தப்பானவரை
ஏற்க முடியாது என்பதே!!

கருத்துகள் இல்லை: