நாமாக பிரிக்கவில்லை 04

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும்இ நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)


இல்லாதை இருக்கு
என்று சொல்லின்.
நானே எனக்கு
சாபமிடுவதில் சாட்சி.
நம்புகிறீரா?
நாய நபி வஹியை.


பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’அல்குர்ஆன் 3:61

‘’யார் ஒர் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அதைப் பின்பற்றுவோரின் கூலியைப் போன்று அவருக்கும் உள்ளது. அவர்களின் கூலியில் எவ்வித குறையும் ஏற்படுவதில்லை. யார் ஓர் வழிகேட்டின் பக்கம் அழைக்கின்றாரோ அதைப் பின்பற்றுவோரின் பாவங்களைப் போன்று அவருக்கும் உள்ளது. அவர்களின் பாவங்களில் எவ்வித குறையும் ஏற்படுவதில்லை’ (நூல்; புகாரி)

கிழக்கில் உதிக்கிற
சூரியன் மேற்கே உதித்திருக்கும்
அவன் நினைத்திருந்தால்

அவன் படைப்பதிலும்
பலசாலி
என்பதை நிருபித்ததான்.
உம்மையும் படைத்து.

திகைப்பை விரும்பாது
தெளிவாகச் சொல்கிறேன்.
என் தேடல்களை.

முற்றுப்புள்ளியிட்டான்
முஹம்மத் நபியுடனே
அவன் தூதுச் செய்திக்கு.

கூட்டத்திற்கு கூட்டம்
நபி கொடுத்தவன்
எம் நபியை
எமக்காக என்றுமே
வைத்திருக்கலாமல்ல.!!!

ஏதுமில்லாவுலகை
இவ்வளவு உருவாக்கியவனுக்கு
இது ஒன்று
முடியாத முயற்சியுமல்ல.

மீன் வயிற்றுக்குள் வாழ்ந்ததும்
குகைக்குல் தஞ்சமிருந்ததும்
வானுக்கு உயர்த்த பட்டதும்
உன் பாதுகாப்புதானே!!

இறைவா!!
உம்மத் ஒன்றுமில்லா
உலகை அழிக்கும்போதே
உம்மி நபியையும்
உலகை விட்டு
உன்னோடு எடுத்திருக்கலாம்தானே !!!

பாதிக்கப்பட்ட பாமரனின்
விரக்தி வினா இது!!

கருத்துகள் இல்லை: