நாமாக பிரிக்கவில்லை 05

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40


இறைத்தூதர்
இறைபோன பின்னே!
இறை நேசர்
இல்லா பூவுலகை

அன்றே அழித்திருப்பான்
எதற்காக வைத்தானோ?

அவன் தெய்வீக கணக்கு
என்றும் பிழைத்தில்லை
சலைத்ததுமில்லை.

அவன் நீதிக் கொள்கை
அநீதிப்பதில்லை.

இன்னும் இவ்வுலகை
இமாமத்தில் இயங்கச் செய்வது
அவன் அரசாட்சிக்கு
அது இன்னுமொரு
ஆதாரம்…

பாமரரே !!
மீண்டும் படித்து பார்
இதுதான் விடை.

இதை நாமாக சொல்ல வில்லை
நல்லதொரு வசனமே சொல்கிறது.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையா ளர்களுடன் இருந்து கொள்ளுங்கள். (தவ்பா 119)

நம்பிக்கையை உள்ளத்தில்
முள்ளாக ஏற்றி
செயல்களால்
சொட்டுச் சொட்டாய்
நன்மை சேகரிப்போரே!!
நாம் யாரோடு இருக்கிறோம்.
எங்கே இந்த உண்மையாளர்?

காதிருந்து கேட்காதும்
கண்ணிருந்து பார்க்காதும்
உள்ளமிருந்து உணராதும்.
ஊனமுற்ற விலங்குகளா?
நாம்…

நான் ஏசவில்லை
இப்படியான எம்மை
அல்லாஹ்வே வீசுகிறான்.

மேலும் உண்மை யாதெனில். ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும். அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். 7:179

கருத்துகள் இல்லை: