பாவம் நான்

என்னை ஏனோ


மறந்தீர்கள்!!!


உங்கள் நட்புக்கு

எனக்கிடமில்லையா?

என்னிடம் நிறைய இடமிருக்கிறது

வாருங்கள் வாருங்கள்.


என் friendship முகவரி

facebook ல் இல்லையோ !!

என்னை மறந்தீர்கள். ?


என் friendship முகவரி

worldbook ல் இருக்கிறது

அது உங்களக்கு தெரியாதோ!!


நானோ மறந்தவர்களுக்கு

எதிரானவன்

அட் பண்ணிக் கொள்ளுங்கள்

என் முகவரியை.


பொதுப் பெயர்

அல்குர்ஆன்

பொறிக்கப்பட்ட பெயர்

புர்க்கான்.


கலாமுல்லாஹ்

கிதாபுல்லாஹ்

அல் ஹ_தா என்பதொல்லாம்

என் சிறப்புப் பெயர்.


பிறப்பு ரமழான்

பிறப்பிடம் கிராகுகை


பெயர் வைத்தவன் அல்லாஹ்

தகுதி பெற்றெடுத்தவர் முஹம்மத்

பணி செய்தவர் ஜிப்ரீல்


பிடித்தது நேர்வழி

பிடிக்காதது நானில்லாத வழி


தகுதி எல்லாவற்றையும் மீறியது

experience

உலகைச் சுற்றி


பலர் பயன் பெருகிறார்

அறியாதவர் அறிஞ்சராகுறார்

பண்பில்லிதவர் பண்புள்ளவராகிறார்

இணைவைப்பிலிருந்தவர்

அவன் அன்புக்குள் அணைகிறார்.


என் பெருமை

எனக்குள்ளிருக்கு

நேற்று நடந்ததும் இருக்கும்

நாளை நடப்பதும் இருக்கும்


இன்று கண்ட விஞ்ஞானத்தை

நான் என்றோ மிஞ்சிட்டேன்.


அதற்காக…

நான் விஞ்ஞான புத்தகமல்ல

எல்லா அறிவும்

சுமந்த வேத பொட்டகம்.


பார்ப்பதில்

என் பக்கங்களை

எண்ணிடுவீர்கள்

என்னை படிப்பதில்

பிண்ணனி தேடுவீர்கள்.


என்னில் எல்லாமிருக்கு

அது எங்கே இருக்கும்

என்பதில் உங்களிடம் இருக்கிறதா?


என்னை அறிபவர்கள் பற்றி

சூரா தவ்பா 108 இல்

சுருக்கமாக சுட்டிருக்கிறேன்.


தேடுங்கள்

தெளிவு கண்டவர்களை.

எழிமையாக வாழ்ந்தார்கள்

ஆனால் அவர்கள்

தெளிவானவர்கள்.


அவர்கள் இழிவு

என்று கருதியது

என் எஜமானை மீறி

என்னை பெற்றவரை தவறி

ஆடம்பரமாய் வாழ்வதை.



நானும் அவர்களும்

மொழியிலும் வழியிலும்

தேவையானோம்


ஆனால் தேவையற்றவர் போல்

ஏதோ ??

மூலைக்குள் முடக்கப்பட்டிருக்கிறோம்.


நானோ

நீங்கள் கேட்காமல்

கிடைத்த அற்பும்


அவர்களோ !!

நபிகளார் கேட்டு

கிடைத்த அற்பும்.

அதற்கு ஆதராம்


என்னில்…

சூரா சூவ்ரா 23 இல்


நானோ

உங்களுக்கு நேர்வழி காட்டுபவன்

நீங்களோ !!

என்னை கண்டு கொள்ளாதவர்கள்


நானோ

உங்களை நன்மை காட்டுபவன்

நீங்களோ !

கடைப்பிடிக்காதவர்கள்


நானோ

உங்களை எச்சரிப்பவன்

நீங்களோ !!

நச்செரிப்பவர்கள்


நானோ

உங்களை சுவனத்துக்கு அழைப்பவன்

நீங்ளோ !!

நரகத்தில் நுளையவே நடிப்பவர்கள்.


பாவம் நான்

உங்களை நேர்வழி படுத்த

படைக்கப் பட்டது.


நானோ

நீங்கள் இல்லாமல்

எப்போதும் சுவனத்தில்

நீங்களோ நானில்லாமல்

ஒரு போதுமில்லை

நரக விடுதலையில்


என்னை படைத்தவனே

என்னை பாதுகாக்க

யாரால் முடியும்

பலுதடை விக்க.


என் இவ்வசனத்தில்

தெளிவிருந்தால்

எப்படி சொல்லுவீர்

ஷீஆ க்களிடம்

வேறென்று…?


நானோ பக்கத்தில்

நீங்களோ வெட்கத்தில்

இன்று என் நட்புக்கு

நாளை உம் தப்புக்கு.


நான் எந்த விதத்தில்

விலை குறைந்தவன்

ஒரு நாளும்

புரட்டாத புத்தகமானேன்?

நாள் தப்பினாலும்

கயஉநடிழழம ழிநn ல்

நானோ தப்பிப் போகிறேன்


நீர் தேடி

நாளை வருவீர்கள்

தப்பிடுவேன் அங்கு

நீங்கள் என்னை தட்டியவர்களென்று.


நீங்கள் பார்க்காத

படமுண்டா பாடலுண்டா?

நான் மட்டும்

பார்க்கப்படாமலே

பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறேன்.


பாவம் நான்

உங்களுக்கு நேர்வழிகாட்ட

படைக்கப்பட்டது.


நான் பாவிகளுக்கு

காட்டுவதில்லை நேர்வழி

அதனால்தான்

இன்னும் நீங்கள்

என் வழி தேடாதவராய். !!


என்னில் நேர்வழி

கண்ணில் மட்டும்

வைப்பவருக்கு தெரிவதில்லை

கல்புக்குள்ளே அதை

வைப்பவருக்கே

தெளிவாக தெரியும்.


நான் மலிவாக கிடைப்பதால்!!

என் பெருமதி

உங்களுக்கு தெரிவதில்லை


மண்ணறையும்.மஹ்ஷரும்

உங்களுக்கு

இலவசமாக கிடைக்கும்

அங்கு மட்டும்

எப்படி தெரியும்

என் பெருமதி

என்று பாருங்கள்.


அழியும் உலகில்

ஆக்குவதெல்லாம்

எனக்குத் தெரியாத ஒன்றல்ல !!


என்னிலிருந்த துளியில்

தொடர் கதை எழுதி

விட்டு !!


இல்லாதை ஒன்றை

உருவாக்கியதாக

கர்வம் கொள்கிறான்.

நான் கல்புகளில்

இல்லாத மனிதன்.


அதெல்லாம் உங்களுக்கு

ஆச்சரியமாகி ஆடம்பரமாக்கிட்டிர்கள்.


என் ஆறை கூவல்

உங்கள் காதுகளில்

ஆதக்கம் செலுத்தலையா?

என் கருணை

உங்கள் கல்புகளில்

கடமையுணர்வு செய்யலையா?


நானோ !!

உங்களை நம்பிக்கை

இழந்தே கால் நடையாக

நச்செரித்தேன்.


தேடக் கூடாதவைகளையெல்லாம்

தேடுகின்ற கண்கள்

என்னை தேடலையா?


புதைந்து போன

உம் நாட்களை விட்டு

என்னோடு புதிதொரு

புரட்சி செய்து பார்


நானில்லாத உள்ளம்

ஊணமுற்ற வீடு

அதனால் எனக்கில்லை

தோல்வி…


பூஞ்சோலை பார்ப்பதில்

சுகமிருக்கா?

என்னை பார்ப்பதில்

புதிய புதிய

சுகமிருக்கும்.


என்னை ஒரு நாள் புரட்டி

ஒரு வரி படித்து பார்

உன்னில் மாற்றம் வரும்


என்னை ஒவ்வொரு நாளும்

நினைத்து பார்

உன்னில் தேற்றம் உருவாகும்.


என் கட்டளையை

கடைப்பிடித்து பார்

உன்னில் கடமையுண்வாய்

நான் புரட்டப்படா பொக்கிஷம்

நீ புரட்டினால் பாக்கிஷம்.


இழந்து போன

உன் கண்ணின் ஒளியை

என்னை பார்த்து

நிவாரணி பெற்றுக் கொள்.


உன் கவளையை

என்னில் தேடிப்பார்

தீர்வு நான் சொல்வேன்.


அதிகாலை எழுந்து

அதான் கடமை முடித்து

என்னை அணுகிப் பார்

நாள் முழுதும்

நானிருப்பேன் உன்னருகில்.


ஓட்டுமொத்த ஓய்வை

என்னோடு சேர்ப்பதில்

சோர்வு இருக்கிறதா?


ஒரு வரி ஓதினாலும்

மீதி நேரத்தை

மீறிச் செல்லாதீர்.

என் எடுத்தல் தடுத்தல்களை.


ஆனால் …

ஓன்று மட்டும் தெளிவு

அது மலிவும் கூட

என் எஜமானை

ஏக்கமிடுவது தவிர

எதனால் ?

இதயங்கள் இன்பமடையா !!!


நான் யாருக்கும்

பாரமில்லை

என் தத்துவங்கள்தான்

உங்களுக்கு பாரம்.


என் தத்துவத்திற்கு

தாகம் தீர்க்க

உன்னால் முடியுமா?


கடலை மையாக்கி

காடுகளை பேனாவாக்கி

எனக்கு விரிவுரை

எழுத முடியாதென்ற

என் வாக்கு பொய்யாகிடுமா?


தெளிவு இருக்கிறது

என்னில்…

பரிணாமம் பெற்றவருக்கு


நீரும் பரிணாமம் பெற்றால்

என்னை அறிந்திடுவாய்.


அதற்கு முன்

என்னை பற்றி அறிந்த

அழகிய ஆசான்

முஹம்மத் நபியிடம் சென்று வா!!


பதவி வகித்த நபியவரும்

பக்குவப்பட்ட

சிலரும் என் தெளிவறிவார்.

விரிவறிவார்.


படைத்தவனே பாதுகாக்கிறான்

அவர்களை பாவங்களை விட்டு

என்னை பாதிப்புகளை தொட்டு.


நான்அவர்களுடன் இருப்பேன்

அவர்கள் என்னுடன் இருப்பர்


என்னை விட்டு

அவர்களால் ஒன்றும்

நேர்வழி காட்டவும் முடியாது.


அவர்களை விட்டு

என்னில் நேர்வழி

தேடி கண்டிடவும் முடியாது.


அவர்களை பற்றி

அவன் சொல்லுகிறான்

என்னில் 33: 33 வில்

பார்த்துக் கொள்.


சீரழிந்த நாட்களை விட்டு

சிறந்த நாட்களுக்காக

என் அருகில்

அவர்களின் வழியோடு

வரவேண்டும். வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை: